சம்பர்க் கிராந்தி அதிவிரைவு ரயிலில் திடீர் தீ விபத்து

பீகார் மாநிலம் தர்பாங்காவில் சம்பர்க் கிராந்தி அதிவிரைவு ரயிலில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

தர்பாங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பர்க் கிராந்தி அதிவிரைவு ரயிலின் பெட்டியில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் தீ பிடித்த பெட்டியை ரயிலில் இருந்து தனியாக பிரித்தனர். மேலும் விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்நிலையில் இந்த தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக விரோதிகளின் செயல்பாடுகளால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version