திருப்பூர் ரசாயன கிடங்கில் தீ விபத்து

திருப்பூர் அருகேயுள்ள ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூர் வாலிபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு குமரன் சாலையில் சொந்தமாக ரசாயன கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் எதிர்பாராத விதமாக திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

இதுகுறித்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ரசாயன கேன்கள் வெடித்து சிதறியதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர். இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Exit mobile version