செல்போனில் பேசிய படியே பெட்ரோல் நிரப்பியதால் தீ விபத்து

கர்நாடக மாநிலத்தில் செல்போனில் பேசிய படியே பெட்ரோல் நிரப்பியதால் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

சாம்ராஜ் நகரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெண் ஒருவர் செல்போனில் பேசிய படியே பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். பெட்ரோல் நிரப்பத் தொடங்கிய சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ பெட்ரோல் பங்க் முழுவதும் ஆக்கிரமித்தது. இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். செல்போனில் பேசிய பெண் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Exit mobile version