தூத்துக்குடி அருகே நவதானியம் மற்றும் பருத்தி கிடங்கில் தீ விபத்து

தூத்துக்குடி அருகே, நவதானியம் மற்றும் பருத்தி ஆகியவை சேமித்து வைத்திருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் குறுக்கு சாலையை சேர்ந்த மகேஷ் என்பவருக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு குறுக்கு சாலை ஓட்டப்பிடாரம் சாலையில் உள்ளது. இதில் பருத்தி நவதானியம் அவரி உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. இதில் சேமிப்பு கிடங்கு முழுவதும் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து தீயணைக்கும் பணியில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், சிப்காட், கடற்படை உள்ளிட்ட 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் எரிந்து சேதமான விளை பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Exit mobile version