புதுப்பிக்கப்பட்ட லாரிக்காக நடந்த பூஜையில் திடீர் தீ விபத்து

குமாரபாளையம் அருகே லாரியை புதுப்பித்து இயக்குவதற்காக நடந்த பூஜையின் போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், லாரி முழுவதும் எரிந்தது நாசமானதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, காட்டுவளவு பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் தனக்கு சொந்தமான பழைய லாரியை புதுப்பித்துள்ளார். இந்நிலையில், கருப்பண்ணசாமி கோவில் முன்பு லாரியை நிறுத்திவிட்டு பூஜை செய்துள்ளார். அப்போது இன்ஜினை ஆன் செய்த பொழுது திடீரென லாரி தீப்பற்றி எரிந்துள்ளது.

தொடர்ந்து காற்று வீசியதால், தீ மேலும் பரவி, லாரி முழுவதும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக, சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version