கான்பூர் அருகே மின் கசிவு காரணமாக தனியார் குடோனில் தீ விபத்து

கான்பூர் அருகே குடோன் ஒன்றில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கலெக்டர் காஞ்ச் நகரில் உள்ள கட்டடம் ஒன்றின் கீழ் தளத்தில் தனியார் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கு காலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. கொழுந்துவிட்டு எரிந்த தீ மளமளவென மாடிகளுக்கும் பரவியது. இதனால் மாடியில் தங்கியிருந்த பொதுமக்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை, கட்டடத்தில் சிக்கி தவித்த பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். மேலும் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என கான்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Exit mobile version