கொல்கத்தாவில் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை கட்டுப்படுத்த 20 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் போராடினர்.

கொல்கத்தாவின் ஹவுரா பாலத்தின் அருகே உள்ள ஜெகன்னாத் கட் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. எதிரே வந்த வாகனங்கள் எதுவும் தெரியாத நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 20 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்த பலமணிநேரம் போராடினர். இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை.

Exit mobile version