தயாநிதிமாறனின் பிரசாரத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் தீ விபத்து

சென்னை அண்ணாநகரில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனின் பிரசாரத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் தீவிபத்து ஏற்பட்டது.

சென்னை அண்ணாநகர் பகுதியில் மத்திய சென்னை மக்களவை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் பிராச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது திமுக நிர்வாகிகள் சரவெடி பட்டாசுகளை வெடித்துள்ளனர். எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் வசிக்கும் பிகே.அர்ஜுனன் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தீப்பற்றியுள்ளது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். குடிசை வீடுகள் உள்ள பகுதியில் திமுகவினர் பட்டாசு வெடித்து தீவிபத்து ஏற்படுத்தியது அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

Exit mobile version