எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரும் இன்று யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இவ்விவகாரத்தில் வெளிநாட்டு படகுகள் சட்டத்தை முழுமையாக அமலாக்க, இலங்கை மீன்பிடித்துறை அமைச்சகம் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பி அளிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version