பொதுக்குழு தொடர்பாக அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

supreme-court

பொதுக்குழு தொடர்பாக அஇஅதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 2-ம் தேதி தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பன்னீர் செல்வத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல் முறையீடு செய்யப்போவதாக பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொதுக்குழு தொடர்பான வழக்கில் அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பொதுக்குழு தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version