கிஷோர்.கே.சுவாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பா.ஜ.க ஆதரவாளரான கிஷோர் கே சுவாமி தமிழக முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்களை அவதூறாகப் பேசியதாக திமுக-வைச் சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் அளித்த புகாரில் அடிப்படையில் கிஷோர் கே சுவாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெண் பத்திரிக்கையாளரை தரக்குறைவாகப் பேசி பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி செய்தியாளரை மத ரீதியில் தரக்குறைவாகப் பேசி பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 24 ஆம் தேதி 3வது வழக்கிலும் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கிஷோர் கே சுவாமி மீது 1 ஆண்டு பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version