அரசு போக்குவரத்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடியில் அரசு பேருந்து ஓட்டுனருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெருமந்தூர் பகுதியில் அமைந்துள்ள
சுங்கச்சாவடியில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. பின்னால் வந்த அரசு பேருந்து தொடர்ந்து ஒலிப்பானை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஓட்டுனருக்கும்
வாய்த் தகராறு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்து ஓட்டுனர்கள், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்த வந்த காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

 

Exit mobile version