மீன்பிடிக்க வீசிய வலையில் சிக்கிய ஐம்பொன் சிலைகள்

கொடுமுடி அருகேயுள்ள காலிங்கராயன் கால்வாயில் மீனவர்கள் வலையில் சிக்கிய விநாயகர் மற்றும் நடராஜர் சிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அருகேயுள்ள காலிங்கராயன் கால்வாயில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனுக்காக வீசிய வலையில், மூட்டைகளால் கட்டி வீசப்பட்ட பொருள் வலையில் மாட்டியது, பின்னர் அதனை திறந்து பார்த்தபோது அதில் வி நாயகர் மற்றும் நடராஜரின் ஐம்பொன் சிலைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அங்கு வந்த காவல் துறையினர் சிலைகளை பத்திரமாக மீட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதிலிருந்த விநாயகர் சிலை 2 அரை அடி உயரமும், நடராஜர் சிலை 1 அடி உயரமும் கொண்டுள்ளது.

Exit mobile version