திருப்பதியில் பிரம்மோற்சவத்தையொட்டி மோகினி அவதாரத்தில் சுவாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று மோகினி அவதாரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து பிரம்மோற்சவத்தின் 4 ஆம் நாளான நேற்றிரவு சர்வ பூபாள வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின் 5 ஆம் நாளான இன்று காலை நாச்சியார் திருக்கோலமான மோகினி அலங்காரத்தில், மாய மோகத்தைப் போக்கும் வகையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அசுரர்களும் தேவர்களும் பாற்கடலில் அமிர்தம் கடைந்த நிகழ்வைக் கலைஞர்கள் நடித்துக் காட்டியது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

Exit mobile version