ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தில் உள்ள கெல்லம் தெவசர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வந்த தகவலை அடுத்து  சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை வெடித்தது. இதில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லபட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version