கல்லூரிகள் அருகே காய்ச்சல் முகாம்கள் – மாநகராட்சி திட்டம்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கல்லூரி விடுதிகள் அருகே காய்ச்சல் முகாம்கள் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் 56 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கல்லூரிகளின் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. காய்ச்சல், இருமல் என லேசான அறிகுறியுடன் காணப்படும் மாணவர்களுக்கு, கொரோனா பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிகளை கிருமி நாசினிகள் மூலம் சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் உள்ள கல்லூரி விடுதிகளிலும், காய்ச்சல் முகாம்கள் நடத்தி மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

 

Exit mobile version