துடியலூரில் உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் துடியலூரில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அந்த யானை, கடந்த 2 நாட்களாக நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.

யானை உயிரிழந்த செய்தி கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைக்கின்றனர்.

Exit mobile version