நாடாளுமன்ற கூட்டத்தொடரை 3 நாட்கள் வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?

நாடாளுமன்ற கூட்டத்தொடரை 3 நாட்கள் வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தொடங்கி, வரும் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனிடையே, நாடாளுமன்ற பாஜக குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேவைப்பட்டால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை 3 நாட்கள் வரை நீட்டிக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சியினருடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக கூட்டத்தொடரின் நாட்களை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version