மத்திய பட்ஜெட் : துணை முதலமைச்சர் பாராட்டு

மத்திய பட்ஜெட், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்வதோடு, எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பொருளாதார வளர்ச்சி, நாட்டு மக்களின் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை மையமாக வைத்து மத்திய பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். வேளாண்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, விவசாய தொழில் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் உயர்வுக்கும் சிறப்பான அடித்தளம் அமைக்கப் பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல் பல்வேறு தரப்பினருக்கு பயனளிக்கக்கூடிய வகையிலும், வேளாண், கல்வி, தொழில், சுகாதாரம் என ஒவ்வொரு துறையும் பெருமைப்படும் வகையிலும் மத்திய பட்ஜெட் உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், சிறப்பான முறையில் பட்ஜெட் அளித்ததற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக துணை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version