தாயை பார்க்கச் சென்ற 9 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கிய தந்தை

மதுரையில் தாயை பார்க்கச் சென்ற 9 வயது சிறுமியை தந்தை வீதியில் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

திருமங்கலத்தில் வசித்து வரும் தம்பதியினரான அப்துல் சமது மும்தாஜ்க்கு இரு மகள்கள் உள்ளனர். கூலித் தொழிலாளியான அப்துல் சமது மது பழக்கத்தால் அடிக்கடி மும்தாஜூடன் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தன் உயிரை காத்துக் கொள்ள உறவினர் வீட்டில் மும்தாஜ் தஞ்சமடைந்தார். இந்தநிலையில், இவர்களின் மூத்த மகளான 9 வயது சிறுமி வழக்கம் போல் பள்ளி சென்றுவிட்டு தாயை பார்த்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதனையறிந்த அப்துல் சமது சிறுமியிடம் தாய் இருக்கும் இடத்தைக் கேட்டு வீட்டிற்குள் அடித்து துன்புறுத்தி உள்ளார். வலி தாங்காத சிறுமி அலறி அடித்து வீதிக்கு ஓடி வர, பின்னால் துரத்து வந்த அப்துல் சமது சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்தார். இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version