"தந்தை பெரியார் பிறந்த நாள் இனி சமூக நீதி நாள்"

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி, சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர், தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தலைமை செயலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடபப்டும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் அதிமுக மனப்பூர்வமாக வரவேற்றுள்ளது. இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக உறுப்பினருமான வைத்திலிங்கம், தந்தைய பெரியார் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு அடித்தளமிட்டவர் என்றும், சாமானியரும் அமைச்சர் ஆகலாம் என்ற நிலையை ஏற்படுத்தியவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

Exit mobile version