சரக்கு வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை -மகள் பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சரக்கு வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள் உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை திம்மராயம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் சௌமியா தம்பதி, தங்களது இரு குழந்தைகளுடன், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, சிறுமுகை சாலை வழியே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆலாங்கொம்பு தண்ணீர் தடம் அருகே, எதிரே வந்த சரக்கு வாகனத்தில் நேருக்கு நேர் இவர்களது வாகனம் மோதியது. இருசக்கர வாகனத்தில் வந்த நால்வரும் தூக்கி வீசப்பட்டு, வாகனத்தை ஓட்டிவந்த வெங்கடேஷ் மற்றும் அவரது ஏழு வயது மகள் கெளசிகா தலையில் பலத்த காயம்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அவரது மனைவி செளமியா மற்றும் மகன் நித்தின் ஆகியோர் அருகில் உள்ள மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர், வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடியநிலையில், விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version