பாகிஸ்தானில் விரைவு ரயிலில் தீ விபத்து: 65 பேர் பலி

பாகிஸ்தானில் லியாகத்பூர் என்னுமிடத்தில் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததில் 65 பேர் உயிரிழந்தனர். பலர் தீக்காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கித் தேஜ்காம் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை இந்த விரைவு ரயில் லியாகத்பூர் என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்தபோது அதன் ஒரு பெட்டியில் பற்றிய தீ 3 பெட்டிகளில் பரவியது. தகவல் அறிந்து ரயிலின் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டார். எனினும் 3 பெட்டிகள் முற்றிலும் எரிந்தன. இந்த விபத்தில் 65 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலர் தீக்காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர். ரயிலில் பயணம் செய்தவர்கள் எரிவாயு அடுப்பில் சமைத்ததாகவும், அப்போது எரிவாயுக் கசிவு ஏற்பட்டுப் பெட்டியில் தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version