தொடர் மின் வெட்டு, குறுவை சாகுபடி தொடங்கிய விவசாயிகள் செய்வதிறியாது கவலை

கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியான மின் வெட்டு காரணமாக விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர்கள் காய்ந்து போவதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மின் வெட்டு வெட்டு அதிகரித்து மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மின் வெட்டு பிரச்சினைக்கு விவசாயிகளும் தப்பவில்லை.

தற்போது குறுவை சாகுபடியை தொடங்கி இருக்கும் கடலூர் மாவட்ட விவசாயிகள் மின்சாரம் இன்றி பயிற்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஏக்கர் கணக்கில் நெற்பயிர்கள் காய்ந்த நிலையில் புரையோடி விட்ட தாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version