விவசாயம் செய்த அனுபவத்தில் கடன் பெறலாம்: பரோடா வங்கி

விவசாயிகள் பெற்றிருக்கும் முன் அனுபவத்தை வைத்து, எந்தவிதமான முன் பிணையும் இல்லாமல் கடன் பெற்றுக்கொள்ளலாம் என பரோடா வங்கி அறிவித்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பரோடா உழவர் திருவிழா என்ற பெயரில் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து வங்கிக் கிளைகளிலும் நடைபெறுகிறது. இதில், விவசாயிகள் பெற்றிருக்கும் முன் அனுபவத்தை வைத்து எந்த விதமான முன் பிணையும் செல்லுத்தாமல் கடன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு பரோடா வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் கடன் பெற விரும்பும் விவசாயிகள் ஏற்கெனவே 5 லட்சம் ரூபாய் வரை கடன்பெற்று இருந்தாலும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது..

Exit mobile version