வெள்ளரிக்காய் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வரும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மருத்துவ குணம் கொண்ட வெள்ளரிக்காய் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர், புதுப்பாளையம், செங்கல்பட்டு, கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட சிறிய அளவிலான வெள்ளரிக்காய் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதால் அதிகளவில் பயிரிட்டிருப்பதாக கூறும் விவசாயிகள், இதனை வியாபாரிகள் நேரடியாகவே தங்கள் விளைநிலங்களுக்கு வந்து கொள்முதல் செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த சிறிய அளவிலான வெள்ளரிக்காய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் நல்ல விலை கிடைப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Exit mobile version