முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்!

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விவசாய சங்கத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளில் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனால் பெரு மகிழ்ச்சியடைந்துள்ள தமிழக விவசாயிகள் சார்பாக, விவசாய சங்கத்தினர், முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க பொது செயலாளர் காவேரி ரெங்கநாதன், தமிழகத்தில் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தது இதுவே முதல்முறை என்றார்.

 

இதை தொடர்ந்து பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர், பி.ஆர். பாண்டியன், நிதி நெருக்கடியையும் பொருட்படுத்தாமல், விவசாய கடன்களை ரத்து செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமார பாராட்டுவதாக கூறினார்.

Exit mobile version