காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் நன்றி

காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறியதற்கு, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூபாய் 7 ஆயிரம் கோடிக்கு மேல் செலவாக உள்ளது. இதற்காக, முதல் கட்டமாக 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு அம்மாவட்ட விவசாயிகள் 600க்கும் மேற்பட்டோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு தேவையான நிலங்களை வழங்க தயாராக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version