நாராயணசாமி நாயுடு பெயரில் விவசாயிகளுக்கான விருது முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

சிறந்த முறையில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான விருது, விவசாயி நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

கோவையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கையை விவசாயிகளுக்கு பெற்றுத்தந்த நாராயண சாமியின் 36வது நினைவு நாளில், அவருடைய பெயரில் விவசாயிகளுக்கான விருது வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

மேலும், தமிழக விவசாயிகள் சங்கம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பாகவும், அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பாகவும், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.

Exit mobile version