ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வேளாண் சேமிப்புக் கிடங்கு விரிவுபடுத்தபட்டதையடுத்து பொதுமக்களும் விவசாயிகளும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள, வேளான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும். ஏலத்திற்கு வரும் விளைபொருட்கள், சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்பட்டு ஏலம் நடைபெறும் நாளன்று ஏலம் விடப்படும். இந்நிலையில், சேமிப்புக்கிடங்கில் இருந்த இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய , கூடுதல் கட்டிடம் அமைக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையேற்று, 2 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்புக் கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, விற்பனை அதிகாரிகள் புதிய கட்டிடத்தை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். தங்கள் கோரிக்கையை நிவர்த்தி செய்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post