முட்டைகோஸை தாக்கும் புதுவித நோய்: விவசாயிகள் வேதனை

கேரள மாநிலம், இடுக்கி காந்தளூர் பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக, பயிரிடப்பட்ட முட்டைகோசில் புதுவிதமான நோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனை சரி செய்ய பல்வேறு பூச்சுகொல்லி மருந்துகள் பயன்படுத்தியதாகவும், ஆனால், நோய் தாக்குதல் சரியாகவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, முட்டைகோஸ் நோய்தாக்குதலை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Exit mobile version