காரைக்காலில் மேகேதாட்டுவில் அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் – முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

மேகேதாட்டுவில் அணை கட்ட ஒப்புதல் வழங்கிய மத்திய அரசை கண்டித்து, காரைக்காலில் விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்காலில் பேரணியாக சென்ற விவசாயிகள் மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். பின்னர் நடைபெற்ற போராட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அரசு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், 14ம் தேதி சட்டப் பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறினார்.

 

 

 

Exit mobile version