நெல் மூட்டைகளை ஃபானி புயலில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி பகுதியில் கொள்முதல் நிலையங்களில் கிடக்கும் நெல் மூட்டைகளை ஃபானி புயலில் இருந்து பாதுகாக்க உடனடியாக சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி, தாலுகா பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் பெரும் பகுதி, அரசின் முயற்சியால், சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரப்பட்டுள்ளது. மீதமுள்ள மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஃபானி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து சென்று பத்திரப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version