புதுச்சேரியில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் பெய்த கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

புதுச்சேரியில் கடந்த இரு தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் பரவலாக கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடல் சீற்றமாக உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Exit mobile version