தர்மபுரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வீணாக செல்லும் உபரி நீரை வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் பேரணியாக சென்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வீணாக செல்லும் உபரி நீரை தர்மபுரி மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு பைப் லைன் மூலம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் குடிநீர் பிரச்சனை தீரும் என்றும் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படாது, விவாசாயமும் செழிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு உடனே வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version