விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

நாகை மாவட்டம் நரிமணத்தில் இருந்து திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டையில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைக்கு, கச்சா எண்ணெய் கொண்டு செல்ல விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தஞ்சை பூதலூர் அருகே வெண்டயம்பட்டி கிராமத்தில், எரிவாயு குழாய் அமைக்கும் பணியினை இந்தியன் ஆயில் கார்பரேசன் அதிகாரிகள் பார்வையிட சென்றனர். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளை சூழ்ந்து, அவர்களின் வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த உயரதிகாரிகள், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் மட்டுமே நம்பி விவசாயத்தில் ஈடுபடும் சிறு விவசாயிகளின் விளை நிலங்களில் எரிவாயு குழாய் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அதிகாரிகளிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Exit mobile version