ஆற்றில் நீர்வரத்து வேண்டி விவசாயிகள் பூஜை

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடகிழக்கு பருவமழை கைகொடுக்கவும், ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வர வேண்டியும் விவசாயிகள் மீன்பிடி உபகரணங்களுடன் பூஜை செய்து வணங்கினர். மணிமுத்தாறு ஆற்றில் கடந்த 5 வருடங்களாக நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் கைகொடுத்துள்ள நிலையில், இப்பகுதியிலும் கனமழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மீன்பிடி உபகரணங்களான ஊத்தா, கச்சா உள்ளிட்ட பொருட்களை தடுப்பணைகளில் வைத்து மலர்சூடி பூஜை செய்து வழிபட்டனர்.

Exit mobile version