நீலகிரியில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

நீலகிரியில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தமிழக அரசின் தொடர் விழிப்புணர்வு மூலம் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். குறிப்பாக, இயற்கை விவசாயத்துக்கு மாறும் வகையில் நிலங்களைப் பதப்படுத்தி, சாண உரம் மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

மேலும், விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்குத் தேவையான இயற்கை உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

Exit mobile version