விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு : அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் தட்கல் முறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக விவசாயிகளுக்கு தக்கல் முறையில் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருடத்திற்கு 20 ஆயிரம் தக்கல் மின் இணைப்புகள் வழங்கப்படுவதாக கூறினார். விருப்பப்படுகிறார்களுக்கு மட்டுமே தக்கல் மின் இணைப்பு வழங்கப்படுவதாகவும், சிலர் வலுக்கட்டாயமாக தக்கல் மின் இணைப்பு வழங்கப்படுவதாக அவதூறு பரப்பி வருவதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Exit mobile version