திருவண்ணாமலையில் மணிலா அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்

திருவண்ணாமலை மங்கலம் பகுதியில் மணிலா சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் மணிலா சாகுபடி செய்யப்பட்டுள்ளனர். 3 மாத பயிரான மணிலாவை தற்போது அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

போதிய பருவ மழை இல்லாததால் மகசூல் குறைந்து உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அறுவடை செய்யப்படும் மணிலா திருவண்ணாமலையில் உள்ள விற்பனை மண்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

Exit mobile version