கோபிசெட்டிபாளையத்தில் வெங்காய சாகுபடியில் அமோக விளைச்சல்: விவசாயிகள் மகிழ்ச்சி

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த குண்டேரிப்பள்ளம் பகுதியில், வெங்காய சாகுபடியில் அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குண்டேரிப்பள்ளம் அணை அருகே, பல பகுதிகளில் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் வாழை, மரவள்ளிக்கிழங்கு, புகையிலை சாகுபடியில், வெங்காயத்தை ஊடுபயிராகவும் சாகுபடி செய்தனர். ரசாயன மருந்துகளை தெளிப்பதில்லை என்பதால் வியாபாரிகளிடம் இப்பகுதி வெங்காயம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வியாபாரிகள் நேரடியாக சென்று கொள்முதல் செய்து, சென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அதிகளவில் அனுப்புகின்றனர்.

இந்நிலையில், தற்போது வெங்காய சாகுபடி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இம்முறையும் வெங்காய சாகுபடியில் நல்ல விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version