புதிய வகை புழுக்கள் தாக்கியதால் பயிர்கள் சேதம் -நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

அமெரிக்கன் புழுக்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்காச்சோள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

அருப்புக்கோட்டை அடுத்த உடையநாதபுரம் கிராமத்தில் சுமார் 1,500 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மக்காச்சோளப் பயிர் செய்துள்ளனர். இதனை அமெரிக்கன் புழு என்ற புதிய வகை புழு தாக்கியதால் 600 ஏக்கர் மக்கசோளப் பயிர்களும் சேதமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் புழுக்கள் தாக்கிய பயிர்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் புழுக்கள் தாக்கிய பயிர்களை பார்வையிட்டு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

Exit mobile version