மதுரையில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

மதுரையில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுக்கிணங்க, முல்லைப்பெரியாறு கால்வாய்களில் இருந்து அண்மையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரை வைத்து மேலூரில் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டது. தற்போது, நெல் விளைச்சல் முழுமையடைந்து, விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனிடையே மேலூர் பகுதிகளில் கூடுதலாக அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Exit mobile version