கர்நாடகாவுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே தடுப்பணைகள் கட்டி கர்நாடகாவுக்கு செல்லும் நீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர், கோட்டாடை உள்ளிட்ட வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்வர்ணாவதி அணைக்கு சென்று சேருகிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள சிக்கள்ளி, தாளவாடி பகுதிகளில் பெய்யும் மழைநீர் மற்றொரு கர்நாடகா அணையான சிக்கோலா அணைக்கு செல்லுகிறது.

தமிழக பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு சென்று சேருவதால் ஓடைகள் மற்றும் பள்ளங்களின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version