புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் -நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

திருமங்கலம் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்காச்சோளம் பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மக்காச்சோளத்தை சாகுபடி செய்த 15 நாட்களில் பயிரை படைப்புழுக்கள் தாக்கியுள்ளன.

இதனால் பேரையூர், டி.கல்லுப்பட்டி, அம்மாபட்டி, சொக்கம்பட்டி, பாறைபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்தை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Exit mobile version