செங்கம் அருகே நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளில் விவசாயிகள் ஆர்வம்

செங்கம் அருகே நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளில் தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில், மக்களுக்கு நீராதாரமாக விளங்கி வந்த குளத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய, ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன.

விவசாயிகள் விளைநிலத்தை இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள, தமிழக அரசும் மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து, விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்க மிகவும் உபயோகமாக இருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் டிராக்டர் மற்றும் பொக்லைன் மூலம் குளத்தில் உள்ள வண்டல் மண்ணை எடுக்கும் பணியில் ஆர்வமுடம் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version