திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், ஊடுபயிராக வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், பூச்சித் தாக்குதலும் கட்டுப்படுத்தப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வேளாண்துறை மூலம், மானியத்துடன் கூடிய உளுந்து விதை கிடைப்பதால், விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Exit mobile version