கனகாம்பரம் பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கனகாம்பரம் பூக்களின் விலை உயர்வால் ஆத்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த எல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கனகாம்பரம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மழையின்மை மற்றும் கடும் கோடை வெயிலின் தாக்கத்திலும், குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பூக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதற்கான விலையும் அதிகரித்துள்ளது. கிலோவிற்கு 300 ரூபாய் வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version