பலாப்பழ விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக பலாப்பழ விளைச்சல் அமோகமாக இருப்பதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலாப்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக இங்குள்ள கீழ்மலை கிராமங்களான பெருமாள் மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழங்கள் அதிகளவில் விளைந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது சுற்றுலா செல்லும் பயணிகள் அதிகளவில் இங்கிருந்து பழங்களை வாங்கி செல்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பலாப்பழம் ஒன்றின் விலை 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version