விருதுநகர் அருகே பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் கீழராஜகுலராமன் பகுதியில் அதிகளவில் பருத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் அதிகமாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பருத்தி ஒரு குவிண்டால் 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்த விவசாயிகள், கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே லாபம் கிடைக்கும் எனவும் கூறினர்.

Exit mobile version